இலங்கை செய்திகள்

தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை

தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமலிருப்பதை அரசியல்வாதிகள் உறுதி செய்யவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாது என தெரிவிக்கும் சட்டபூர்வமான ஆவணத்தில் கைச்சாத்திடவேண்டும் எனவும் ...

மேலும்..

சஹரான் குழுவுடன் எவ்வித தொடர்பும் இல்லை – ஹக்கீம்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேகநபர் சஹரான் ஹாசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டி- பிலிமந்தலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகாண்டு கருத்து வெளியிடும்போதே அவர் ...

மேலும்..

மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, முன்னெடுக்கப்பட்ட மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் இடம்பெறாது என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இத தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, சுகாதார பிரிவினருடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பட்டுக்கு அமைய மருந்துகளை விநியோகிக்கும் ...

மேலும்..

பொதுத் தேர்தல்: ஏராளமான புதிய முகங்களை களமிறங்கியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக கட்சி ஏராளமான புதிய முகங்களை களமிறங்கியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட முகாமையாளருடனான சந்திப்பில் பேசிய ரணில் விக்ரமசிங்க, தமது கட்சி நாட்டின் மக்களின் கருத்துக்களுக்கு ...

மேலும்..

கதிர்காம யாத்திரைக்கு மக்களை அனுமதிக்குமாறு சுமணரட்ன தேரர் கோரிக்கை!

கதிர்காம பாதயாத்திரைகளான எமது இந்து மக்கள் தமது நேர்த்தக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதற்கு  ஜனாதிபதி, பாதுகாப்பு துறையினரும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் ...

மேலும்..

தேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முதல் கூட்டம் நாளை!

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான முதல் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதற்கமைய இந்த கூட்டம்  இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை)  இடம்பெறவுள்ளது. ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் ...

மேலும்..

கொள்ளைச் சம்பவத்தை முறியடித்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு – டிபெண்டர் வாகன சாரதிக்கு விளக்கமறியல்

அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபளின் உயிரிழப்பு தொடர்பான விபத்து குறித்து கைது செய்யப்பட்ட 24 வயது டிபெண்டர் வாகன சாரதி ஜூன் 19 வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவத்தை முறியடித்து சந்தேகநபரை ...

மேலும்..

மன்னார் புதையல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி

மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த சந்தேகநபர்களை, மன்னார் பதில் நீதவானிடத்தில் முன்னிலைப்படுத்தியப்போதே அவர் இவ்வாறு  ...

மேலும்..

மேற்குலக சக்திகளின் ஆலோசனைக்கு அமையவே மங்கள செயற்படுகின்றார்- பந்துல

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, மேற்குலக சக்திகளின் ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றாரென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நீண்டகாலமாக மங்கள ...

மேலும்..

நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற முன்னாள் ஜனாதிபதி திருப்பி அனுப்பப்பட்டார்

பொலனறுவை பௌத்த மையத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொலனறுவை மாவட்டத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதல்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வுக்காக இன்று (திங்கட்கிழமை) அவர் சென்றபோதே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மைத்திரிபால ...

மேலும்..

யாழில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்!

யாழில் பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டு சேட்டை  செய்தார்கள் என நான்கு இளைஞர்கள் மீது  அப்பகுதி மக்கள் தாக்குதல்  நடத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான  இளைஞர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில்  மேலும்  தெரியவருவதாவது, யாழ்.கலட்டி ...

மேலும்..

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்கும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல ...

மேலும்..

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பாதிக்கப்பட்ட  பொதுமக்களுக்கு அரசாங்கத்தினால்  வாழங்கப்பட்ட 500 ரூபாய் கொடுப்பனவு  வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கு இதுவரை வழங்கப்படாது இருந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொடுப்பனவுகள் வழங்கப்படாதது தொடர்பாக  ...

மேலும்..

நேர்மையான முறையில் தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட வேண்டும் – ரிஷாட்

பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சி ஒன்றின் தலைவராக அதுவும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ...

மேலும்..

ஓமந்தையில் கிணற்றிலிருந்து செல்கள் மீட்பு!!

வவுனியா- ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் வீட்டு கிணற்றில் இருந்து வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நீண்டகாலத்தின் பின்னர் வீட்டின் உரிமையாளர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துப்புரவு செய்துள்ளார். இதன்போது குறித்த கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த வீட்டின் உரிமையாளர், ...

மேலும்..