இலங்கை செய்திகள்

நானு ஓயாவில் சொகுசுக் கார் விபத்து: மயிரிழையில் பிழைத்த கணவன், மனைவி

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்தது பாதுகாப்பு வேலியில் மோதி சனிக்கிழமை காலை  விபத்துக்குள்ளானது. இந்நிலையில், சொகுசு காரில் பயணித்தவர்கள் கணவன், மனைவி எனவும் இருவரும் மயிரிழையில் எந்தவித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு  நோக்கி ...

மேலும்..

இலங்கை இராணுவத்துக்கு தலைமை அதிகாரி நியமனம்

கஜபாகு படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ். பீரிஸ் இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை பொறுப்பேற்கும் முன், மேற்கு பாதுகாப்பு படை  கட்டளைத் தளபதியாக அவர் தனது கடமைகளை ஆற்றியிருந்தார். அவர், பாணந்துறை புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை மற்றும் ...

மேலும்..

மாந்தை மேற்கில் வெள்ளம் 72 குடும்பங்கள் இடம்பெயர்வு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையால் மன்னாரில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்துள்ளார். மேலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ...

மேலும்..

பொறுமையை கோழைத்தனமென கருத வேண்டாம் ; தேசிய தேர்தல்களில் நாங்கள் வெற்றிப்பெறுவோம்!  பஷில் ராஜபக்ஷ அபரிமித நம்பிக்கை

விமர்சனங்களைக் கண்டு பொறுமையாக இருப்பதால் எம்மை கோழைத்தனம் என்று கருத வேண்டாம். மக்களாணையுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவோம்.கொவிட் பெருந்தொற்று தாக்கம், பயங்கரவாதம் ஆகிய உயிரச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை ராஜபக்ஷர்களே காப்பாற்றினார்கள். எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் பொதுஜன பெரமுனவே ...

மேலும்..

கடைத் தொகுதியை உடைத்துக் கொண்டு உட்சென்ற புத்தளம் தடயவியல் பொலிஸ் ஜீப்

புத்தளம் தடயவியல் பொலிஸ் பிரிவுக்குரிய ஜீப் வாகனம், புத்தளம் கூட்டுறவு சங்கக்; கடைத் தொகுதியை உடைத்துக்கொண்டு சென்று விபத்துக்குள்ளான சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. புத்தளம் குட்சைட் வீதியிலிருந்து வருகை தந்த ஜீப் வாகனத்தை புத்தளம் - கொழும்பு பிரதான வீதியிலுள்ள எரிபொருள் ...

மேலும்..

நாட்டைப் பிளவுபடுத்த ஒரு போதும் இடமளியோம் ; தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் இணையவேண்டும் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

ஒரு தரப்பினரது குறுகிய நோக்கங்களுக்காக நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது. எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் நாங்கள் வெற்றிப்பெறுவோம். எமது பயணத்தில் ...

மேலும்..

நலிவுற்றுள்ள நிலையிலுள்ள சமூகங்களுடன் நேரடியாக பணியாற்ற அதிக முக்கியத்துவம்! ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்ட வதிவிடப்பிரதிநிதி தெரிவிப்பு

இலங்கையில் நலிவுற்ற நிலையிலுள்ள சமூகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அவர்களுடன் இணைந்து நேரடியாகப் பணியாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியை அடுத்து நாட்டிலுள்ள வறிய மற்றும் பின்தங்கிய ...

மேலும்..

பாலியாறு பெருக்கெடுத்து மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன!

மன்னாரில் வியாழக்கிழமை மதியம் முதல் தொடர்ந்து  பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன்  மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து ...

மேலும்..

நுவரெலியாவில் உணவகத்தில் தீ!

நுவரெலியா பிரதான நகர், லோஸன் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்தத் தீப்பரவலால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரியவருகிறது. எனினும், உணவகத்தின் சமையல் அறையில்  காணப்பட்ட பொருள்கள் பல தீயில் கருகிவிட்டன. இந்தத் தீ விபத்துக்கான காரணம் ...

மேலும்..

மட்டக்களப்பு கரடியனாறு காட்டுப் பகுதியில் கசிப்பு, கோடா பரல்களுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு கரடியினாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பஞ்சுமரத்தடி காட்டு பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது எட்டு பாரிய பரல்களில் கசிப்பு மற்றும் கோடாவுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கரடியனாறு  பொலிஸ் நிலைய ...

மேலும்..

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவை ஜனாதிபதி ரணில் மேற்பார்வை செய்தார்

உயர்மட்ட சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து ஹோட்டன் சமவெளியை அண்மித்த பிரதேச அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். ஹோட்டன் சமவெளி தேசிய பூங்கா உட்பட அதனை அண்மித்த பகுதிகளை உயர்மட்ட சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

நாட்டு மக்கள் ஆட்சி அதிகாரத்தை தப்பிச்சென்ரோரிடம் ஒப்படைக்கார்! மஹிந்த சாட்டை

நெருக்கடியான சூழ்நிலையில் ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்றவர்களிடம் நாட்டு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். இதேவேளை, எம் மீதான விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல எனவும் 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான சேறு பூசல்களே காணப்பட்டன எனவும் மஹிந்த ...

மேலும்..

மக்களுக்கு ஏற்படப்போகும் தலைவிதியை நினைத்து கவலையடைகின்றாராம் சஜித்!

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் மக்களுக்கு ஏற்படப்போகும்  தலைவிதியை நினைத்து கவலையடைகிறேன் செல்வந்தர்களை மாத்திரம் போஷிக்கும் வரவு செலவு திட்டமாகவே காணுகிறோம் என எதிர்க்கட்சித் தலைரவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் இறுதி வாக்கெடுப்புக்கு பின்னர் ...

மேலும்..

3 ஆயிரத்து 520 மில்லியன் டொலர் கடனுதவியை எதிர்பார்க்கின்றோம் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் கருத்து

சர்வதேச நாணய நிதியம் இரண்டாம் கட்ட கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளமையால், சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து 3520 மில்லியன் டொலர்  கடனுதவிகளை எதிர்பார்க்கின்றோம்.  எனவே இடைநிறுத்தப்பட்டுள்ள சுமார் 200 அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவில் மீள ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க ...

மேலும்..

தனவந்தர்களை மேலும் செல்வந்தவர்களாக்கும் வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது! எதிர்க்கட்சி தலைவர் சஜித் கவலை

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் தனவந்தர்களை மேலும் செல்வந்தவர்களாக்குவதாகவும், சாதாரண மக்களை உதாசீனப்படுத்தும் வகையிலுமே காணப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் எதிர்கொள்ளப் போகும் நெருக்கடிகள் கவலைக்குரியவையாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வரவு - செலவு ...

மேலும்..