5 நாட்களில் 52 உயிர்களை காவுக்கொண்ட வாகன விபத்துக்கள்
நாட்டில் கடந்த 5 தினங்களில் மாத்திரம் 399 வாகன விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 13ம் திகதி முதல் நேற்றைய தினம் வரை இந்த வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதன்படி, கடந்த 5 நாட்கள் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, இந்த விபத்துக்களில் 669 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
வாகன விபத்துக்கள் தொடர்பில் 2242 வாகனங்களை பொலிஸார் தமது பொறுப்பிற்கு பொலிஸார் எடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை