மாவீரர் நாளை முன்னிட்டு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று (30) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணி குழுவினரால் துயிலும் இல்ல வளாகத்தை சுத்தப்படுத்தும்  வேலைகள் இன்று (30) ஆரம்பிக்கப்பட்டது.

 

இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் தேராவில் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் மக்கள் சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர் நலன்  விரும்பிகள் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இணைந்து   இந்த சிரமதான பணியை முன்னெடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

சிரமதானம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் புலனாய்வாளர்கள் அப்பகுதிக்கு வருகைதந்து புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக   தெரிவிக்கப் படுகிறது

தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பெரும் பகுதியை இராணுவம் தம்வசம்  வைத்துள்ள நிலையில் எஞ்சிய சிறு நிலப்பரப்பிலேயே மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.