கனடா – இலங்கை வர்த்தக மாநாடு மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை மாவட்ட வர்த்தக சபைக்கும் கனடா இலங்கை வர்த்தக மாநாட்டிற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இக் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை இடம் பெற்றது.

இந்த ஒத்துழைப்பு இரு பிராந்தியங்களுக்கிடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதையும், வணிக வாய்ப்புகளை மேம்படுத்துவதையும், பரஸ்பர வளர்ச்சியை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒன்றாகச் செயல்படுவதன் மூலம், வர்த்தகம், முதலீடு மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களை மேம்படுத்த இரு தரப்பினரும் தங்களின் தனித்துவமான பலம் மற்றும் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வணிகத் தலைவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கவும் இந்த கூட்டாண்மை உதவும்.