நிகழ் நிலை காப்புச் சட்டம் குறித்து ஊடக செயலமர்வு!

ஹஸ்பர் ஏ.எச்

பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைக்கான பொறுப்புக்கள் எனும் தலைப்பில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று நேற்று(சனிக்கிழமை) திருகோணமலையில் உள்ள சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.

மேற்படி செயலமர்வை சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் நிகழ் நிலை காப்புச் சட்டம் தொடர்பில் அதன் மூலமான சட்டம் எவ்வாறாக காணப்படுகிறது தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டது.

இதில் சுதந்திர ஊடக இயக்கத்தின் முக்கியஸ்தர்கள், பிரதேச ஊடகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.