திமிங்கில வாந்தியை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது

திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட 5 கிலோ அம்பர்கிரிஸ்ஸை (திமிங்கில வாந்தி)  1 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வலானா பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.