குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு – 7 பேர் காயம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிக்கோயா தோட்ட தேயிலை மலையில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டை கழுகு கொத்தியதில் குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியுள்ளன.

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஆறு பெண்களும் இரண்டு ஆண்களுமாக எட்டுபேர் காயமுற்றுள்ளனர். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகாமலர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் தேயிலை செடிகளினுள் சிக்குண்டுள்ளவர்களை மீட்க பிரதேசவாசிகளும் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.