விசேட அதிரடிப்படையினரால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு இன்று (05) முகாம் பொறுப்பதிகாரி எம்.எச்.ஏ.மதுரங்க தலைமையில் முகாமை அண்டிய பகுதிகளில் நடைபெற்றது.
இன்று உலக சுற்றுச்சூழல் தினமாகும். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோரு ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.
2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக ‘பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதுகாப்போம்’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன்போது கோவில்கள், வடிகான்கள், வீதியோரங்கள் போன்ற இடங்களில் தேங்கிக் காணப்பட்ட கழிவுகளை அதிரடிப்படை வீரர்கள் அகற்றி சுத்தப்படுத்தி சூழலை அழகுபடுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.