தேர்தல் பணிகளை இடைநிறுத்தி திருமலை சென்றார் சுமந்திரன்!

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலய காணி தொடர்பான வழக்கு நேற்றுதிருகோணமலையில் உள்ள மாகாண மேல்நீதி மன்றத்தில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கை ஏற்று நடத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், நேற்றைய தினம் தனது தேர்தல் பிரசாரப் பணிகளை ஒத்திவைத்து வழக்குக்காக திருகோணமலை சென்றார்.

இந்த வழக்கின் வழக்காளியும் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளருமாகிய கோகிலரமணி அம்மா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ . சுமந்திரன் முன்னிலையாகிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ .சுமந்திரன் “ காலை 10.40 மணி முதல் 12.30 வரை இடம்பெற்ற வழக்கு விசாரணையில் அரச தரப்பிலே  முன்னெடுத்த வாதமானது.

இது புராதன பொக்கிசம் சம்மந்தப்பட்ட விடயம் என்பதனால் தேசிய புராதன பெக்கிசம் என்பதனால் மாகாண மேல் நீதி மன்றத்திற்கு நியாயதிக்கம் இல்லை என்றும் கொழும்பில் உள்ள மேல் முறையீட்டு நீதிமன்றத்திலே தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.

ஏற்கனவே இந்த வாதம் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்டு இந்த வாதம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் இடைக்கால உத்தரவு சம்பந்தமாக கோகிலரமணி அம்மா சார்பில் வாதிட்ட போது எப்படியாக மாகாண மேல் நீதி மன்றத்திற்கு நியாதிக்கம் கிடைத்திருக்கின்றது என வாதத்தை முன்வைத்தனர்.

அதை மேல் நீதி மன்றம் ஏற்றுக்கொண்டு இந்த வழக்கை தொடர்ந்து நடாத்தி இருக்கின்றது. மேல் நீதிமன்றத்திற்கு எதிராக எந்த முறையீடுகளும் அரச தரப்பு செய்திருக்கவில்லை. எனவே ஏற்கனவே அமுலில் இருக்கும் உத்தரவை மாற்ற முடியாது என்பதே வாதமாக இருந்தது.

இந்த இரண்டு வாதத்தையும் நீதிமன்றம் முழுமையாக கேட்டுக்கொண்டு எழுத்து மூலமான சமர்ப்பணங்களுக்காக செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு வழக்கு தவணை குறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான எழுத்து மூல சமர்ப்பணங்களை நீதிமன்றம் ஏற்றதன் பின்னர் இறுதித் தீர்மானம் ஒன்றை நீதிமன்றம் கொடுக்கும்” என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.