செட்டிகுளத்தில் இறந்த நிலையில் யானையின் உடல் மீட்பு

வவுனியா, செட்டிகுளம் கப்பாச்சி கிராமத்தில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் இன்று (12) மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், கப்பாச்சி கிராமத்தில் உள்ள குளத்தை அண்டிய வயல் பிரதேசத்தில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வயல் வேலைக்கு சென்ற விவசாயிகளே இறந்த யானையின் உடலை கண்டு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

அருகில் இருந்த காட்டில் இருந்து வயல் பிரதேசத்திற்குள் நுழைந்த குறித்த யானை பூச்சித் தாக்கம் காரணமாக இறந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இறந்த யானையின் உடலை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.