இரணைமடு குளத்தின் கீழ் பகுதிகளுக்கான வெள்ள முன்னெச்சரிக்கை !

தற்போது இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 33 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கலாம் எனக் கூறி உள்ளது எனவே நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள முன் எச்சரிக்கையை இரணைமடு குளத்தின் கீழ் பகுதிகளுக்கு விடுத்துள்ளது.

இதன் பிரகாரம் முரசுமோட்டை பன்னங்கண்டி மருதநகர் ஊரியான் கண்டாவளை மற்றும் கனகராயன் ஆற்றின் ஓரப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் சில வேளைகளில் மழை வீழ்ச்சியின் தன்மையை பொறுத்து இன்று (22) பிற்பகல் அல்லது நாளை வான் கதவுகள் திறப்பதற்கான சாத்தியப்பாடு உள்ளது.

(தகவல் -மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கிளிநொச்சி)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.