கிளிநொச்சி சேவைச் சந்தையை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நாளை திறக்க அனுமதி

கிளிநொச்சி சேவைச் சந்தையை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நாளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளுடன் கிளிநொச்சி சேவைச் சந்தை நாளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொது சந்தைகளை சுகாதார நடைமுறைகளுடன் திறப்பது தொடர்பான விசேட கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.திருலிங்கநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றிருந்தது.

பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமான குறித்த கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவையினர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொலிசார், இராணுவத்தினர், சந்தை வர்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மொத்த சந்தை தொகுதியை தனியாகவும், சில்லைறை வர்த்தக நடவடிக்கைகளை சந்தை வளாகத்தின்  வெளிப்பகுதியிலும் நடார்த்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எந்தவொரு வாகனத்தையும் சந்தை உட்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை எனவும், சந்தை வெளிப்பகுதியில் நிறுத்தவும் சுகாதார தரப்பும், பிரதேச சபையினராலும் ஏற்றுக்கொள்ப்பட்டது.

இதேவேளை சந்தை தொகுதியின் இரு பிரதான வாயில்களை மாத்திரம் திறக்கவும், ஒரு வழி பாதையாக பயன்படுத்தவும் இரு தரப்பாலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கவும் சுகாதார தரப்பு அறிவுறுத்தியிருந்தது. இத்தனை நடைமுறைகள் உள்ளடங்கலாக கிளிநொச்சிபொது சந்தையை திறக்க சிபாரிசு செய்வதாக சுகாதார துறையினர்  தெரிவித்திருந்தனர்.

குறித்த தீர்மானத்திற்கு பொலிசாரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

நேற்று ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தை வட மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று எதிர்வரும் நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.திருலிங்கநாதன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பேணி நாளை சேவைச் சந்தையை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.