கல்முனை மனித உரிமை பிராந்திய இணைப்பாளராக ஏ.சி.அப்துல் அஸீஸ் நியமனம்

(பாறுக் ஷிஹான் )
அம்பாறை மாவட்டம், கல்முனையில் இயங்கி வரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏ.சி.அப்துல் அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய இடமாற்றம் பெற்று வந்த இவர், கல்முனை, கிட்டங்கி பிரதான வீதியிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக சுமார் 20 வருடங்களுக்கு மேலாகக்ப்கடமையாற்றிய நிலையில், அங்கு அடிப்படை மனித உரிமை மீறல் சம்பந்தமாக பிரச்சினைகளை புலனாய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு அதனடிப்படையில் தீர்வுகளை வழங்கியுள்ளதுடன், தற்போது கல்முனைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
தற்போது கல்முனைப் பிராந்தியத்தில் அரச நிர்வாக நிறைவேற்று அதிகாரிகளுக்கெதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடுகளை ஆணைக்குழு விசாரணை செய்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும், பரிந்துரைகளை முன்வைக்கவும் 1996ம் ஆண்டில் 21ம் இலக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சட்டத்திற்கமைவாக அதிகாரம் வழங்கப்பட்டு, மக்களின் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரு அரச நிறுவனம் என்பதைக் கருத்திற்கொண்டு மக்கள் இத்தகைய முறைப்பாடுகளைச் செய்ய முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு உரிமை மீறல்கள் தொடர்பில் முறையிட விரும்புபவர்கள் 0672229728 எனும் பிராந்திய காரியாலய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
இதேவேளை, முன்னதாக கல்முனை பிராந்திய இணைப்பாளராகப் பணியாற்றிய அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டடக்களப்பு பிராந்திய இணைப்பாளராக இடமாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.