நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டம்!

நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டத்தை இவ்வாண்டுக்குள் பூர்த்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அனுராதபுர மாவட்டத்தின் அலியாபத்துவ கிராமத்தில் சமுர்த்தி உற்பத்திக் கிராம வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனூடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் இரண்டு உற்பத்திக் கிராமங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சு நாடு முழுவதிலும் ´சௌபாக்கிய வாரத்தை´ அமுலாக்கி வருகின்றது.

இதன் மூலம் சுயதொழில்கள் உருவாக்குவதுடன், உற்பத்திகளை சந்தைப்படுத்த சந்தை வசதிகளையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.