குறைந்த வருமானமுள்ள குடும்பங்கள், சமுர்த்தி பெறுநர்களுக்கு இலவச மின்சார இணைப்புகளை வழங்கப்படும் – மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும 

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கும் இதுவரை மின்சாரம் வழங்கப்படார சமுர்த்தி பெறுநர்களுக்கும் இலவச மின்சார இணைப்புகளை வழங்குவதற்கான முதல் கட்டத்தைத் தொடங்க சகல ஏற்பாடுகளையும் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.
அமைச்சு வளாகத்தில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் சமுர்த்தி அதிகார சபை, இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போதே அமைச்சர் டலஸ் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டில் மின்சாரம் இல்லாத வீடுகளை அடையாளம் கண்டு இவ்வாண்டு இறுதிக்குள் அவர்கட்கு மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களையும் மின்சார வசதியற்ற சமுர்த்தி பெறுநர்களையும் அடையாளம் கண்டு மார்ச் 15ஆம் திகதிக்குள் சமுர்த்தி அதிகார சபையிடம் அறிக்கை சமர்க்கப்பட வேண்டும் என சமுர்த்தி அதிகார சபையிடம் அமைச்சர் அறிவுறுத்திய அதேவேளை இச்செயன்முறையை விரைவுபடுத்துமாறு இலங்கை மின்சார சபைத் தலைவருக்கும் அறிவுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.