54 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கையின் கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 5 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு கைதான இந்திய மீனவர்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.