திராய்க்கேணியில் உலருணவு நிவாரணம்.

அட்டாளைச்சேளை பிரதேசசெயலத்திற்குட்பட்ட திராய்க்கேணி கிராம மக்களுக்கு ஒருதொகுதி உலருணவு நிவாரணம் நேற்று வழங்கிவைக்கப்பட்டது.
கிழக்கின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் இதனை வழங்கிவைத்தார்.

கொரோனாத் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த ஒருதொகுதி அம்பாறை மாவட்ட மக்களுக்கு 1மில்லியன் ருபா(10லட்சருபா) செலவில் உலருணவு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது..

கனடா நாட்டிலுள்ள ‘ ரு டீப் ‘ நிறுவனம் இதற்கான நிதிஅனுசரணையை கிழக்கின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலினூடாக வழங்கியுள்ளது.
முன்னதாக திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மண்டானை மற்றும் கஞ்சிகுடிச்சாறு ஆகிய கிராம மக்களுக்கு ஏலவே உலருணவு நிவாரணம் வழங்கும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.