பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாயினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஆக குறைந்த பேருந்து கட்டணம் 20 ரூபாயாக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பினை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் நாளுக்கு நாள் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.