தொகுதி பங்கீடு குறித்த முடிவை அடுத்தே கூட்டணி குறித்து முடிவு – அண்ணாமலை

தொகுதி பங்கீடு குறித்த முடிவை அடுத்தே கூட்டணி குறித்து முடிவு வெளியிடப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் தனக்குத் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம் கிடையாது என்றும் ...

மேலும்..

யாழ்.சாவகச்சேரி – பாரதி பாலர் முன்பள்ளிச் சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி…

யாழ்.சாவகச்சேரி - பாரதி பாலர் முன்பள்ளிச் சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று (04) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தரும், தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான க. ரஜனிகாந்தன் விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இதன்போது முன்பள்ளிச் ...

மேலும்..

சண்முகா ஹபாயா சர்ச்சை: மேலும் இரண்டு புதிய வழக்குகள்.ஆசிரியை பஹ்மிதா ரமீஸுக்கு எதிராக அதிபரால் முறைப்பாடு !

நூருல் ஹுதா உமர் திருகோணமலை சண்முகா இந்து வித்தியாலயத்தில் தனது கடமையினை ஏற்கச்சென்ற ஆசிரியை பஹ்மிதா அவர்களை தாக்கி கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில் ஏற்கனவே வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்ற நிலையில் 17.03.2023 ஆம் திகதியாகிய இன்று அச்சம்பவம் ...

மேலும்..

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 155 ஓட்டங்கள்

இலங்கைக்கு எதிராக வெலிங்டனில் இன்று(17) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களை ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது. மழை காரணமாக ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் தடைப்பட்டதுடன் இன்று(17) 48 ஓவர்களை மாத்திரமே ...

மேலும்..

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின்படி இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் நேற்றைய வீதமான ரூ. 327.20இலிருந்து ரூ. 332.06 ஆகவும், விற்பனை வீதம் ரூ. ...

மேலும்..

நீதிமன்றில் சரணடையச் சென்ற வழியில் ‘பூரூ மூனா’ கைது !

ரவிந்து சங்க என்றழைக்கப்படும் பூரு மூனா, நீதிமன்றத்தில் சரணடைய சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக் காலமாக இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படும் அவர், நீதிமன்றில் சரணடைவதற்காக சட்டத்தரணி ஒருவருடன் சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சரணடைவதற்காக அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ...

மேலும்..

யாழில் வறுமையில் சிக்கித் தவிக்கும் 1814 கர்ப்பிணிகள் -கோப்பாய் பிரதேச செயலகம் முன்னிலை

யாழ். மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் ...

மேலும்..

உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ...

மேலும்..

யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கினர்.

யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி மத்தி ரோட்டரி (Rotary) கழகமும்,நலன் விரும்பிகளும் இணைந்து கல்வித் தேவையுடைய மாணவியின் காணிக்குள் தென்னங்கன்றுகள் நாட்டி வழங்கினர். கோரக்கன்கட்டு கிராம அலுவலர் பிரிவில் இதற்கான நிகழ்வு நேற்று ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களுக்கு நிரந்தரமாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துங்கள்: தமிழ் அகதியின் கோரிக்கை

ஆஸ்திரேலியா: தற்காலிக விசாக்களிலும் கடல்கடந்த தடுப்புகளிலும் உள்ள அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை கோரி தமிழ் அமைப்புகளும் அகதிகள் உரிமைகளுக்கான அமைப்பும் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது. இதில் பங்கேற்ற ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரசின் இயக்குநரும் முன்னாள் தமிழ் அகதியுமான நிமலாகரன் சின்னக்கிளி, தற்காலிகமாக உள்ள அகதிகளுக்கு நிரந்தர தீர்வைக் கோரியிருக்கிறார். அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அகதிகள், ஆஸ்திரேலியாவின் படகு கொள்கை காரணமாக மலேசியா, இந்தோனேசியாவில் சிக்கியுள்ள அகதிகள் தொடர்பாகவும் இப்போராட்டத்தில் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற தனது கடந்த காலத்தை பகிர்ந்த நிமலா, “கடந்த அக்டோபர் 2009யில் மலேசியாவிலிருந்து 253 தமிழர்களுடன் சிறிய படகில் ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டோம். ...

மேலும்..

வீதி விபத்தில் சிக்கிய அம்பாரை மாவட்ட முன்னாள் (எம்.பி)பொடியப்பு பியசேன உயிரிழப்பு!

வீதி விபத்தில் சிக்கிய அம்பாரை மாவட்ட முன்னாள் (எம்.பி)பொடியப்பு  பியசேன அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான சாலையில் - சென்று கொண்டிருந்த பேருந்தில், ...

மேலும்..

நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நூருள் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபையின் 60ஆவது சபை அமர்வு நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது. சபையின் வழமையான நடடிக்கைகளை தொடர்ந்து நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு குறித்து அப்பிரதேச ...

மேலும்..

சாய்ந்தமருதில் 9 வீடுகள் கையளிப்பு !

நூருல் ஹுதா உமர் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான செளபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட  சமூர்த்தி பயனாளிகளுக்கான வீடுகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருதில் நடைபெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி ...

மேலும்..

புத்தூரில் பொது நுலக அமைப்பிற்கு மேலும் 30 மில்லியன் நிதியை இறுதிக் கணக்கிலிருந்து சபையினால் விடுவிப்பு – தவிசாளர் நிரோஷ்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைக் காரியாலய வளாகத்தில் புத்தூர் உப அலுவலகத்திற்கான நவீன பொது நுலகத்தினையும்  கேட்போர் கூடத்தினையும் அமைப்பதற்கு சபை நிதியில்  30 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ...

மேலும்..

ஈழநாடு பத்திரிகையின் 30வது ஆண்டு விழா இசைச்சங்கமம் 2023

கனடிய மண்ணில் கடந்த 30 ஆண்டுகளாக எந்தச் செய்தியையும் முந்தித் தரும் ஒரே ஏடான உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகையின் 30வது ஆண்டு விழா எதிர்வரும் 23 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. கலைமாமணி ராஜேஸ் வைத்தியா அவர்களின் ...

மேலும்..