காரைதீவைச் சேர்ந்த 200 குடும்பங்கள் பயன்பெற ரூபா.500 வவுச்சர்கள் பிரதேச செயலாளரிடம் KDPS தலைவரினால் கையளிப்பு…

காரைதீவைச் சேர்ந்த சுவிற்சலாந்தில் வசிக்கும் திரு.தேவராஜா மற்றும் ரஞ்சனி அவர்களின் அனுசரணையில் காரைதீவைச் சேர்ந்த 200 பிந்தங்கிய குடும்பங்கள் பயன்பெற ரூபா.500 வவுச்சர்கள் பிரதேச செயலாளரிடம் KDPS தலைவரினால் (2020-04-24) நேற்றய தினம் கையளிக்கப்பட்டது. இவை அனைத்தும் கிராம சேவகர்களினூடாக பயனாளிகளுக்கு வழங்கப்படும். ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 304 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 109 பேர் கொரோனாவிலிருந்து முழுயாக மீண்டுள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் ...

மேலும்..

காணாமல் போயிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு!

காணாமல் போயிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் (வயது 37) இன்று(சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவரது மோட்டார் ...

மேலும்..

கடற்படை வீரர்களுக்கு பயணக்கட்டுப்பாடு – 400 பேருக்கு இன்று பீ.சீ.ஆர் சோதனை!

கடற்படை வீரர்கள் அனைவருக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் அனுமதி வழங்கப்பட்ட கடமைகளுக்கு மாத்திரமே முகாம்களை விட்டு வெளியேற முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், செலிசர கடற்படை முகாம் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் இருந்து வெளியேறவும் ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது – கபே

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் மூல விண்ணப்பங்கள் பலரின் கைகளின் ஊடாக பறிமாற்றப்படுவதாகவும் அவ்வாறு பறிமாற்றம் ...

மேலும்..

கடற்படையினர் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என தெரிவிப்பு!

கடற்படையினர் குறித்து மக்கள் தேவையற்ற சுகாதார ரீதியான பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையின் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடற்படையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 60 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ...

மேலும்..

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அவதானம்!

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அதிகாரிகளிடம் சட்டமா அதிபர் அனுமதி கோரியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயவர்த்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சட்டமா அதிபர் திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ...

மேலும்..

அரசியலமைப்புக்கு வெளியே எந்தவொரு தீர்மானத்திற்கும் வரவேண்டியதில்லை என மகாசங்கத்தினர் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகாசங்கத்தினருக்கு விளக்கியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தல், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், மக்களுக்கு வழங்கிய நிவாரணங்கள் ...

மேலும்..

416 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

* மேலும் 48 பேர் இன்று அடையாளம் * 107 பேர் குணமடைவு * 259 பேர் சிகிச்சையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை416 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் 11 ...

மேலும்..

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் பாரிய சந்தேகம்- சிவமோகன்

ஒரு ஜனநாயக விழுமியங்களை ஏற்றுக்கொண்டு நாட்டை சுமூகமான நிலையில் நடத்த வேண்டிய கோட்டாபய அரசாங்கம் அதற்குப் புறம்பான நடவடிக்கைகளை எடுத்துவருவது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகத்தைப் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுலானது ஊரடங்கு…..

கடந்த திங்கட்கிழமை 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21 மாவட்டங்களில் அண்மையில் தளர்த்தப்பட்டிருந்தது. தினமும் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுகின்ற ஊரடங்கு இரவு 8 மணிக்கு ...

மேலும்..

வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை விரைவில் உறவினர்களுடன் சேர்ப்பது கட்டாயம்- வைத்தியர் சத்தியமூர்த்தி

வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை சுகாதார முறைப்படி உறவினர்களுடன் விரைவில் சேர்க்க வேண்டியது கட்டாயமானது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களுக்கு உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழ்நிலையில் தவறான வழியில் சொந்த இடங்களுக்கு வருவதற்கு அவர்கள் எப்படியும் ...

மேலும்..

4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

வெலிசறை கடற்படை முகாமினைச் சேர்ந்த நான்காயிரம் கடற்படை வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே குறித்த நடவடிக்கை ...

மேலும்..

கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா – குழந்தை உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 415 வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை  உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 379 இலிருந்து 414 ஆக உயர்ந்தது.   மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 409 ஆக அதிகரிப்பு. வெலிசர கடற்படை முகாம் கடற்படைச் சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ...

மேலும்..