பிரதான செய்திகள்

தமிழர்களுக்கு எதிரான காட்டுச் சட்டங்கள் நிறுத்தப்படவேண்டும் என்கிறார் கஜேந்திரன்!

தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதும் தமிழ் மக்களுக்கு எதிராக காட்டுச் சட்டங்களை பயன்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டு ...

மேலும்..

பழம்பெரும் நடிகர் ‘சிறிசேன’ காலமானார்

இலங்கையைச் சேர்ந்த பிரபல மூத்த நடிகரான 'சுமிந்த சிறிசேன' தனது 75 ஆவது வயதில் திங்கட்கிழமை காலமானார். கம்பஹாவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

பெருமளவான இராணுவ அங்கிகள் காங்கேசன்துறையில் மீட்கப்பட்டன!

இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றை அதன் உரிமையாளர் துப்ர்ரவு செய்து, கிணற்றை இறைத்த போது ...

மேலும்..

அரசியல்வாதிகள் பொதுப் போக்குவரத்தை பாவிக்கும் கலாசாரத்தை உருவாக்குவோம் அநுர திடசங்கற்பம்

பஸ், ரயில் என அரசியல்வாதிகள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் புதிய அரசியல் கலாசாரத்தை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தனிப்பட்ட பாதுகாப்புக்காக தேசிய மக்கள் ...

மேலும்..

இந்தியாவிலிருந்து யாழிற்கு நேரடியாக சீனி இறக்குமதி! அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை யாழிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற கூட்டுறவு சங்கங்கங்களின் ஆணையாளர்கள், தலைவர்கள், சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

உணவுப்பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் 50000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புது முறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு இவ்வாறு மேலும் 50000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ...

மேலும்..

போதகருக்கு ஒருசட்டம் தேரருக்கு ஒரு சட்டமா? சாணக்கியன் கேள்வி

தமிழர்களைத் துண்டு துண்டாக வெட்டுவேன் எனக் கருத்துத் தெரிவித்த அம்பிட்டியே சுமண தேரருக்கு ஒரு சட்டமும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு இன்னுமொரு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

சர்வதேச மனக்கணித போட்டியில் யாழை சேர்ந்த சிறுவன் சாதனை!

2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழைச் சேர்ந்த மாணவரொருவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். யுசி மாஸின் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவனே ஆறு வயதுக்குட்பட்ட ஏ1 பிரிவு போட்டியிலேயே இரண்டாம் ...

மேலும்..

பல்கலை நினைவுத் தூபி விவகாரம்: மீண்டும் விசாரணைகளுக்கு அழைப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில்  இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், தூபி அமைப்புக்கான நிதி கையாளுகை தொடர்பிலும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட ...

மேலும்..

மட்டு. கொக்குவிலில் சவப்பெட்டியுடன் மாபெரும் போராட்டம் நடத்திய மக்கள்!

கல்முனையிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு – கொக்குவில் பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த சிறுவனின் ...

மேலும்..

யாழ். பல்கலை விஞ்ஞான பிரிவால் மாபெரும் நடை பவனி நடந்தது!

யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடை பவனி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த நடைபவனி பிறவுண் வீதி, இராமநாதன் வீதி, கே.கே.எஸ் வீதி, வைத்தியசாலை வீதி, பலாலி வீதி ...

மேலும்..

ஞானசாரருக்கு எதிரான வழக்கு மார்ச் 11 இற்கு ஒத்திவைப்பு!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார். 2014 ஆம் ...

மேலும்..

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு யாழில் விஷேட நிகழ்வுகள்!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு, புலர் அறக்கட்டளையின்  ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில்  வலிமேற்கு பிரதேச செயலர் திருமதி.கவிதா உதயகுமார், வட்டுக்கோட்டை பிரதேச வைத்திய அதிகாரி திரு.சி.செந்தூரன், ஓய்வுநிலை பெரதேனிய பல்கலைக்கழக ...

மேலும்..

இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத்தமிழர் மீள வேண்டும்! அமைச்சர் ஜீவன் தெரிவிப்பு

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 'சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ...

மேலும்..

டெங்குத் தடுப்பு உதவியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனக் கோரியே குறித்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பல கோரிக்கைகள் அடங்கிய ...

மேலும்..