இலங்கை செய்திகள்

ராஜபக்ச அரசில் பிரதமராக வருவதற்கு துடிக்கிறார் சஜித் – மஹிந்த அணி தாக்கு 

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் கீழ் பிரதமராக வர முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எண்ணுகின்றார்." - இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடக சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் ...

மேலும்..

3,000 ராணுவத்தினரை கொன்றேன் என்பதுதான் கோட்டாவுக்கு கருணாவின் பிறந்தநாள் வாழ்த்து – விசனிக்கின்றார் மங்கள 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர்  மங்கள சமரவீர, தாம் எத்தனை படையினரைக் கொன்றோம் என்று கூறி, அது குறித்துப் பெருமையடைவதுதான் 'போர்வெற்றி' ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சி வேட்பாளர் கருணா அம்மான் வாழ்த்துத் ...

மேலும்..

கருணாவின் உரைக்கு எதிராக  ஐ.தே.கவினரும் போர்க்கொடி!

"மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக கருணா அம்மான் தெற்கிலும், வடக்கு மற்றும் கிழக்கிலும் வெவ்வேறு மாதிரியாக கருத்துக்களைக் கூறி வருகின்றார். இவர் போன்ற சந்தர்ப்பவாதிகளை மக்களை ஏமாற்றுவதற்கு அறிவுள்ள மக்கள் சமூகம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை." - இவ்வாறு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ...

மேலும்..

கருணா வழங்கிய இரகசியத் தகவலினாலேயே  புலிகளுடனான போரை விரைவாக முடித்தோம் – அவரின் கூற்று பாரதூரமானதல்ல என்கிறது மஹிந்த அணி

"போர்க்காலத்தில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக  முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளமை ஒன்றும்  பாரதூரமான விடயமல்ல.  தமிழீழ விடுதலைப் புலிகள்  தொடர்பான இரகசியத் தகவல்களை ...

மேலும்..

3 ஆயிரம் இராணுவத்தைக் கொன்றால்தான் ‘மொட்டு’வில் தேசியப் பட்டியல் கிடைக்குமா? கருணாவின் கருத்தைக் கண்டித்து மஹிந்தவிடம் சஜித் கேள்விக்கணை

ஆனையிறவில் ஒரே இரவில் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொலை செய்தோம் என்று கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்கான தகுதி ...

மேலும்..

கடந்த அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனாவால் பலர் உயிரிழந்திருப்பர்- மஸ்தான்

கடந்த அரசாங்கம் இப்போது அதிகாரத்தில் இருந்திருந்தால் மக்களில் அதிகமானோர் ‘கொரோனா’ வந்து இறந்திருப்பார்கள் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான காதர் மஸ்தான் தெரிவித்தார். நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள சூரிய கட்டைகாட்டு ...

மேலும்..

ஆட்டநிர்ணயத்தை மறைப்பது ஒரு குற்றம் – லக்ஷமன் கிரியெல்ல

ஆட்ட நிர்ணயம் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின்பு முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ...

மேலும்..

நல்லூரில் தாக்குதல் நடத்தச் சென்ற ஏழு இளைஞர்கள் கைது!

நல்லூரில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் ஏழு இளைஞர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நல்லூரில் இளைஞர் ஒருவரைத் தாக்குவதற்காக அவரது வீடு தேடி இளைஞர்கள் ஏழு பேர் கொண்ட குழு, மோட்டார் சைக்கிள்களில் நேற்று ...

மேலும்..

இலங்கையில் இதுவரை 95 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள்!

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 1,495 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதிமுதல் இதுவரை 94 ஆயிரத்து ...

மேலும்..

நாவாந்துறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய இரண்டு பேர் கைது

யாழ்.நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 520 கிலோகிராம் மாட்டிறைச்சி கண்டெடுக்கப்பட்டதோடு இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக கட்டி வைத்திருந்த மூன்று மாடுகளும் இரண்டு ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் ...

மேலும்..

வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம்

தென்மராட்சி – வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு வெகு விமர்சையாக இடம்பெற்றது. கொரோனா நிலைமை காரணமாக சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, குறித்த இரதோற்சவம் நடைபெற்றது. இதன்போது குறிப்பிட்டளவிலான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க ...

மேலும்..

ரிஷாட் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் ஊடாக அரிசி இறக்கமதி செய்யப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ...

மேலும்..

இராணுவத்தை சேர்ந்த 71 பேருக்கு பதவியுயர்வு

இராணுவத்தைச் சேர்ந்த 71 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் கேர்னல் பதவியில் இருந்த 41அதிகாரிகள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனரென இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதேபோன்று, லுதினன் கேர்னல் பதவியில் இருந்த 30பேர், கேர்னல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் எதிர்வரும் ஜூன் மாதம் ...

மேலும்..

ஆயிரக்கணக்கான படையினரை கொலை செய்தேன்: கருணாவின் கருத்திற்கு ருவான் எதிர்ப்பு

ஆனையிறவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்தேன் என விநாயகமூர்த்தி முரளீதரன் வெளியிட்டுள்ள கருத்திற்கு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ருவான் விஜயவர்த்தன, தனது ருவிட்டர் பதிவிலேயே கருணாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குறித்த ருவிட்டர் பதிவில் அவர் மேலும் ...

மேலும்..

இந்தியாவில் தங்கியிருந்த 194 இலங்கையர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டிற்கு வரமுடியாமல் இந்தியாவில் தங்கியிருந்த 194 இலங்கையர் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தங்கியிருந்த 150 பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கியிருந்த 44 பேருமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட ...

மேலும்..