21ஆவது திருத்தச் சட்ட தொடர்பில் தமிழ்கட்சிகள் ஆராய்வு

21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக தமிழ் தேசிய கட்சிகள் இன்று ஒன்றுகூடவுள்ளன.

இந்த சந்திப்பானது இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் ஏனைய தமிழ்கட்சிகளும் குறித்த சந்திப்பில் பங்கேற்று, 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராயவுள்ளன. அதேநேரம், குறித்த சந்திப்புக்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பானது, வவுனியாவில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.