வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் அரச ஊழியர்கள் SLBFE இல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்….

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் அரச ஊழியர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) தம்மைப் பதிவு செய்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

SLBFE உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அரச ஊழியர்கள் தங்கள் தகவல்களை உள்ளிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலையீட்டுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்கு மிகவும் அவசியமான அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கான விரைவான திட்டம் இது என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.