முல்லை நகரில் இடம்பெற்ற பண்டாரவன்னியனின் 219வெற்றிநாள்.

முல்லை நகரில் இடம்பெற்ற பண்டாரவன்னியனின் 219வெற்றிநாள்.

முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 219ஆம் ஆண்டு வெற்றிநாள் 25.08.2022இன்று முல்லைத்தீவு நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் பண்டாரவன்னியனின் திரு உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி நினைவுகூரல்கள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், கரைதுரைப்பற்று பிரதேசசபையின் உபதவிசாளர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேஸ்வரன், இலங்கை தமிழரசுக்கட்சியின் முள்ளியவளை கிழக்கு மூலக்கிளைச் செயலாளர் நடராசா அசோக்குமார் ஆகியோருடன் மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.