சீன நிறுவனம் இரசாயன உரத்தை திரும்பப் பெறவோ அல்லது மாற்றவோ மறுக்கிறது: மஹிந்த அமரவீர!!!

சீன உர நிறுவனமான சீவின் பயோடெக் சர்ச்சைக்குரிய சேதன உர இறக்குமதிக்காக செலுத்தப்பட்ட பணத்தை மீள வழங்கவோ அல்லது முன்பதிவு செய்யப்பட்ட சேதன உரத்திற்கு பதிலாக இரசாயன உரங்களை வழங்கவோ மறுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனம், இலங்கையின் சேதன உரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.

உர இறக்குமதி தொடர்பாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழு சீன நிறுவனத்துடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகிறது. அமைச்சர் தெரிவித்தார்.

“சீன நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப் பெறுவது அல்லது செலுத்தப்பட்ட தொகையை அனுமதிக்க இரசாயன உரத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை நான் ஆராய்ந்தேன். இருப்பினும், இரண்டு கோரிக்கைகளுக்கும் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. சேதன உரத்தை முதலில் முன்பதிவு செய்தபடியே பெற வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பணம் மற்றும் உரம் இரண்டையும் இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் சேதன உரங்களுக்கான தரநிலைகள் இல்லை எனவும், சேதன உரத்திற்கு தேவையான தரங்களை தயாரிக்குமாறு இலங்கை தரநிலை நிறுவனத்திற்கு பணிப்புரை வழங்கியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் (NPQS) நிர்ணயித்த தரங்களுக்கு இணையாக சேதன உரங்களை வழங்க முடியாது என சீன நிறுவனம் கூறியது என்றும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

மேற்படி இறக்கு தி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதாகவும், மேலதிக நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க நீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்காக அமைச்சு காத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.