இணைந்த கரங்கள் அமைப்பினால் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன..

இணைந்த கரங்கள் அமைப்பினால் இன்று அதிக கஷ்ட பிரதேச பாடசாலையான மட்/ககு பொண்டுகள் சேனை கணபதி வித்தியாலயம் (கிரான்) தரம் 1 தொடக்கம் தரம் 8 வரையான 57 மாணவர்களுக்கும் மற்றும் மட்/ககு முறக்கொட்டான் சேனை இ.கி.மி வித்தியாலய தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையான 88 மாணவர்களுக்கும் இணைந்த கரங்கள் அமைப்பினால் மொத்தமாக 145 மாணவர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா (300000) அதிகமான மதிப்புடைய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன இக் கற்றல் உபகரணங்களை இணைந்த கரங்களின் மாவட்ட இணைப்பாளர்களான லோ.கஜரூபன், கண்ணன், சங்கீத், டெரித்,ரிஸ்வான் ஆகியோர்களும் இணைந்து வழங்கி வைத்தனர்

 

 

மாவட்ட இணைப்பாளர்களின் ஒருவரான லோ. கஜரூபன் கூறுகையில்

எங்களுடைய இந்த இணைந்த கரங்கள் அமைப்பானது மிகவும் கஸ்டப்பட்ட கிராமத்தில் வாழ்கின்ற கல்வி கற்று வருகின்ற வறிய மாணவ செல்வங்களுக்கான கற்றல் உபகரணங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம் எவ்விதமான வேறுபாடுகளும் இல்லாது சகல பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கும் இச் சேவையினை வழங்கி வருகின்றோம் இதை எண்ணி பெருமிதம் கொள்கிறது எமது இணைந்த கரங்கள் அமைப்பு.

 

இணைந்த கரங்கள் அமைப்பானது குறுகிய காலத்தில் இத் திட்டத்தினை ஆரம்பித்து சுமார் 4 மாத காலத்தில் 1500 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவியுள்ளது

சில பாடசாலைகளின் வேண்டுதல்களுக்கு அமைவாக தரம் 5 புலமை பரீட்சை மாதிரி வினத்தாள் களையும் சுமார் 400 க்கு மேற்பட்ட வினாத்தாள்களையம் வழங்கியிருந்தோம் இதனை வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கும் நன்கொடையாளர் களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.