உணவு உற்பத்தி வீழ்ச்சி: குழந்தைகள் அதிகம் பாதிப்பு

உணவு உற்பத்தியில் கூர்மையான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள தேசிய புத்திஜீவிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உணவு கொள்வனவு தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், அதனையொட்டி இலங்கையில் குழந்தைகளின் போசாக்கு மட்டம் பாதிக்கப்படுவதாக அமைப்பின் உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

தானிய உற்பத்தி 32.3% குறைந்துள்ளது, நாட்டில் தேயிலை உற்பத்தி 19.7%, நெல் உற்பத்தி 15.6%, அறுவடை 15.3%, கால்நடை உற்பத்தி 13.6%, காய்கறி உற்பத்தி 13.2% குறைந்துள்ளது.

மேற்கூறிய அனைத்து காரணிகளும் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை பாதிக்கின்றன, மேலும், நெருக்கடியின் காரணமாக, மக்கள் ஒரு நாளைக்கு ஒரு உணவை மாத்திரமே உண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.