இலங்கையர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகளை சவூதி அரேபியா வழங்கவுள்ளது

கட்டுமானத் தளங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வேலைக்காக சவூதி அரேபியாவுக்குச் செல்வதற்கு முன், சவூதி பொறியியல் பேரவையில் பதிவு செய்வது அவசியம் என்பதை இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) சவூதி அரேபியாவில் கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய பல வேலை வாய்ப்புகளை இலங்கை விரைவில் பெறும் என தெரிவித்துள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தற்போது சவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாறான நிர்மாணத் திட்டங்களில் இலங்கை நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார் என SLBFE இன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அத்தகைய வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தகுதியான நபர்கள் பதிவு செய்ய இணையதளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.