பிறந்து 54நாட்கள் நிரம்பிய பெண் குழந்தை மரணம்

சாவகச்சேரி நிருபர்

சாவகச்சேரி-கிராம்புவில் பகுதியைச் சேர்ந்த பிறந்து 54நாட்களே ஆன பெண் சிசு ஒன்று 20/11 ஞாயிற்றுக்கிழமை காலை திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் பெற்றோர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வந்த போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருப்பதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கிராம்புவில் சாவகச்சேரியைச் சேர்ந்த சுஜீபன் றேஷ்மி என்ற பெண் குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.