நாடு முழுவதும் வேகமாக பரவும் புதிய வைரஸ் – மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா நோயுடன் ஒப்பிடும் போது, ​​இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதால் முறையான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில், இன்புளுவன்சா போன்ற அதே அறிகுறிகளுடன் ஒரு நோய் பரவுகிறது. கொரோனா போலவே, இது இருமல் மற்றும் சளி ஆகியவற்றில் தொடங்கி நிமோனியா வரை செல்லும். எனினும் அந்த நிலைமை மிக அரிதாகவே அதிகரிக்கும்.

நாடு முழுவதும் வேகமாக பரவும் புதிய வைரஸ் - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Warning To The General Public For New Virus

கொரோனாவுடன் ஒப்பிடும்போது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றினால் இந்த நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

முகக் கவசம் அணிவது மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது போன்ற முறைகள் மூலம் இந்த நோயைக் குறைக்கலாம். நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இது போன்ற விடயங்களில் மிக முக்கியமானது, மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதுதான். ஏனென்றால் பெரும்பாலானவர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை, சுடுநீரை குடித்துவிட்டு பாரம்பரிய விடயங்களை எடுத்துக்கொண்டு ஓய்வெடுத்தால், போதும். வேறு மருந்து எதுவும் தேவையில்லை.

காய்ச்சல் உள்ளதென்றல் பாராசிட்டமால் பயன்படுத்தலாம். காய்ச்சல் குறையவே இல்லை என்றால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்” என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.