களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் ஆரம்பம்

களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் அனல்மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

போதியளவு நெப்தா இல்லாததால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தற்போதுள்ள நெப்தாவைக் கொண்டு மீள் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது இன்னும் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபையினால் பணம் செலுத்தப்படாமையால் நெப்தா வழங்க மறுத்தமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.