அரசாங்கத்தின் உத்தரவினையும் மீறி மதுபானசாலைகளை திறந்தால் கடும் நடவடிக்கை!

அரசாங்கத்தின் உத்தரவினையும் மீறி மதுபானசாலைகளை திறப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மதுவரித்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியதாச போதரகம இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அறிவிப்பிற்கேற்ப ஊடரங்கு சட்டம் தகர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்காமலிருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனுமதிப்பத்திரம் வைத்திருந்தாலும் மதுவரித்திணைக்களத்தின் தீர்மானத்தையும் மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடரங்கு சட்டம் தளர்த்தப்படும் போது மதுபானசாலைகள் திறக்கப்பட்டால் அவை தொடர்பாக 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.