நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம் – மீண்டும் நண்பகல் அமுலாகின்றது!

நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும், கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளிலேயே இன்று(திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் நண்பகல் 2 மணி முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மக்கள் சன நெரிசல் நிறைந்த பகுதிகளில் கூடுவதை முடிந்தவரை குறைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேபோன்று குறித்த காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தடையினை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும், கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பிரதேசங்களில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் நண்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வட மாகாணத்தில் உள்ள மக்கள் தங்களது பிரதேசங்களை விட்டு வெளியேறத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் இருந்து வருகை தந்திருந்த மதபோதகரை தனியறையில் சந்தித்த ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவரால் நடாத்தப்பட்ட மத வழிபாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.