கொரோனா – 3500 பேர் 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்!

தற்போது 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 3500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 31 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 82 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட ஒருவரும் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.