வீடுகளில் அத்தியவசியப் பொருட்கள் தீர்ந்தமையால் பல குடும்பங்கள் அவதி!

மன்னார் மாவட்ட மக்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் ஆதரவு வழங்கி வருகின்றபோதும் மூன்றாவது நாளாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்துவதற்கு முன்னர் மக்கள் கொள்வனவுசெய்துள்ள அத்தியவசியப் பொருட்கள் முடிவடைந்த நிலையில் அவதிப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தினால் நாளாந்த கூலித் தொழிலுக்குச் செல்லும் குடும்பஸ்தர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த ஊரடங்குச் சட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் இன்று திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று காலை முதல் மன்னார் மாவட்டம் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான முறையில் காணப்படுகிறது.

மன்னார் பகுதியில் மக்கள் அவசியத் தேவைகளுக்குச் சென்று வருகின்றனர். எனினும் தனியாகச் சென்றுவருபவர்களிடம் முகக்கவசத்தை அணிய பொலிஸார் பணிப்புரை விடுத்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.