ஊரடங்கு நிலையினால் நிர்கதியாக இருக்கும் உறவுகளுக்கு கல்முனை இளைஞர்சேனையின் சமூகபணி…
கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பினரால் இன்று மதிய உணவும், இரவு நேரத்துக்குரிய உணவும் கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை பகுதியில் உள்ள யாசகர்களுக்கு வழங்கப்பட்டது.
அதே நேரம், அன்றாடம் கூலி தொழில் செய்து வாழ்ந்து வரும் 3 குடும்பங்களுக்கு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுக்கு தேவையான அரிசி, மா, மரக்கறி ஆகியன வழங்கி வைக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை