கொழும்பின் சில பகுதிகளில் திடீர் நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 1 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பு 04 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.