கொரோனா சந்தேகம்: யாழ். தாவடியில் இருந்து சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து 4 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபருடைய சகோதரியின் மகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி இன்று (புதன்கிழமை) நண்பகல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் இராணுவம், பொலிஸ் கண்காணிப்பில் அம்பியூலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை