அரச ஊழியர்களுக்கு பண்டிகை கால முற்பணம் இம்முறை வழங்கப்படாது என அறிவிப்பு!

சித்திரை புத்தாண்டுக்காக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முற்பணம் இம்முறை வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அரச நிர்வாக அமைச்சு சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.