கொலைக்குற்றவாளிக்கு மன்னிப்பு! இதுதான் நாட்டின் இன்றைய நிலை!! – கோட்டாவைக் கடுமையாகச் சாடுகின்றார் மங்கள

“உலகின் ஏனைய நாடுகள் குற்றமிழைத்த இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கி இராணுவத்தினரின் நன்மதிப்பைப் பாதுகாக்கும். ஆனால், இலங்கையில் எண்மரைப் படுகொலை செய்த மரணதண்டனைக் கைதிக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது. இதுவே இலங்கையின் இன்றைய நிலை.”

– இவ்வாறு கடுமையாகச் சாடியுள்ளார் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.

யாழ்.மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

இது குறித்து மங்கள சமரவீர அவரது ருவிட்டர் பக்கத்தில் நேற்று பின்வருமாறு பதிவிட்டிருக்கின்றார்

“உலகின் ஏனைய நாடுகள் இராணுவத்துக்கு அவமதிப்பையும், இழிவையும் ஏற்படுத்திய குற்றவாளிகளைத் தண்டிப்பதன் ஊடாக தமது இராணுவத்தினரின் நன்மதிப்பைப் பாதுகாக்கின்றன. ஆனால், இப்போது ஒரு சிறுவனையும் இன்னும் எழுவரையும் படுகொலை செய்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது. இதுவே இலங்கையின் இன்றைய நிலை” – என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.