சம்மாந்துறை பொலீஸ் பிரிவில் ஊரடங்கை மீறிய 27 பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இன்று தற்போதுவரை 2 பேரும் எல்லாமாக 22 ஆம் திகதியிலிருந்து 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று ஒரு வான் உட்பட்ட 5மோட்டார் சைக்கிள்களும் இன்று ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலீஸ்நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தமிழ் சி.என்.என். இணையத்துக்குத் தெரிவித்தார்

.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.