கொரோனா சிகிச்சைக்காக ஜப்பான் இலங்கைக்கு உதவி!

கொரோனா சிகிச்சைக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ‘எவிகன்’ எனப்படும் 5 ஆயிரம் மருந்து வில்லைகளையே இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளது.

குறித்த மருந்து நாளை(செவ்வாய்க்கிழமை) நாட்டை வந்தடையும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்புக்காக சீனா, உபகரணங்கள் சிலவற்றை வழங்கியுள்ளது.

குறித்த உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.