கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 117 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 11 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.