சி.வி.கேயின் நிதியில் மாவிட்டபுரம் மக்களுக்கு உதவி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியால் கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதியில் மிகவும் வறுமையில் வாடும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே..சிவஞானத்தின் சொந்த நிதியான 52 ஆயிரம் மூபாவிலிருந்தே இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்வில் வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை செயலாளருமாகிய சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சேனாதிராசா கலையமுதன், இலங்கைத் தமிழரசுக் கட்சி இளைஞர் அணி யாழ்.மாவட்ட தலைவர் க.பிருந்தாபன், தமிழரசுக் கட்சி மகளிர் அணியைச் சேர்ந்த துஷ்யந்தி ஆகியோர் கலந்துகொண்டு உணவுபர் பொதிகளை வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.