ஜப்பானிலிருந்து இன்று கொண்டுவரப்படுகின்றது கொரோனாவினை குணப்படுத்தும் மருந்து!

கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் வகையில் எவிகன் என்ற மருந்து வகையை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த மருந்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக 5 ஆயிரம் மருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த மருந்து வகை இன்று(செவ்வாய்கிழமை) நாட்டை வந்தடையும் என அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேகர தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.