ஊரடங்கை மீறிய 7,358 பேர் கைது
நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7,358 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் என 1,768 வாகனங்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை