சி.வி.கேயின் நிதியில் வலி.வடக்கு மக்களுக்கு உதவி!

வடக்கு மாகாண அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானத்தின் சொந்த நிதியில் நேற்று வலி.வடக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட தெல்லிப்பழை கிழக்கு, வலித்தூண்டல், சேந்தாங்குளம், இளவாலை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் பெ.கனகசபாபதி, வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உப தவிசாளர் பொ.இராசேந்திரன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சேனாதிராசா கலையமுதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞர் அணித் தலைவர் க.பிருந்தாபன், மகளிர் அணி உறுப்பினர் துஷ்யந்தி ஆகியோர் கலந்து உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.