கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரால் அளவெட்டி மக்களுக்கு உதவி!

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜின் கோரிக்கைக்கு அமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிதி உதவியில் அளவெட்டி பொன்னிப்புலம் பகுதியில் நேற்று உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

அந்தப் பிரதேசத்தில் சுயதொழிலில் ஈடுபடுகின்ற 30 குடும்பங்களுக்கே இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. உதவிக்கரம் நீட்டிய அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுக்கு சேவைகள் போய் சேர்ந்தால் சரி தனது பெயரை எந்த இடத்திலும் பாவிக்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.